Mathippeedu

மதிப்பீடு
மண்ணில் பிறந்த மானிடர் பலருக்கு
மனதினுள் இருக்கும் இரண்டு பக்கங்கள்
புரிந்ததை வாழ்தல் புத்தியின் திறமை
புறந்தள்ளி வைத்தல் வாழ்வில் மடமை
உடைநடை கண்டு எடை போடாமல்
உளமதை அறிந்தால் உண்மை தெரியும்
அடுத்தவர் தமது பண்பின் முகமதை
அன்பின் துணைவழி அறிந்திட முயன்று
;அங்கொரு பங்கம் விளங்குதல் புரிந்தால்
தீங்கினை விலக்கிட தெளிவாய்ப் பழகிடு
யானையைப் பார்த்த குருடரைப் போலே
விதவிதக் கருத்துக்கள் வீணே வேண்டாம்
மனமதை அளந்தே ஒருவரை மதிப்பிடு
மகிழ்வொடு வாழ்ந்திட அதுநல் மதிப்பீடு…

Leave a Reply

(*) Required, Your email will not be published