Mottukkal Malarkinrana

மொட்டுக்கள் மலர்கின்றன

வித்துக்கள் நித்திய பராமரிப்பால்
முளைவிட்டு இலைவிட்டுப் பயிராகி
களையோடு காலம் கனியும் வேளை
மொட்டவிழ்த்து முனைப்போடு மலர்கின்றன

காலங்கள் சிறப்பாகக் கனியும்வரை
காத்திருப்பு ஒவ்வொருவர் மனதிலுந்தான்
கொக்காகக் கொழுத்தமீன் வரும்வரையில்
பொறுத்திருக்கும் வாழ்வில் தப்பேதுமில்லை

அரும்புகள் விரியும்வரை பொறுத்திருத்தல்
அமைதியாய்ப் பயன்பெறப் பார்த்திருத்தல்
தருணத்தைக் கணித்திருக்கும் நற்கணங்களே
தாழ்வில்லை அதிலென்றும் வரும்வெற்றிகளே
பொறுமையான அணுகலிங்கு பெருமையாக
மொட்டுக்கள் மலர்கின்றன அருமையாக.
             
                      

Leave a Reply

(*) Required, Your email will not be published