Thirai Maraivil // திரை மறைவில்…

திரை மறைவில்…

ஆணவமெனும் திரை மறைவில்,
ஞானத்தை மறைத்திட நினைப்பதனால்,
அகந்தை ஓங்கியே தலையுயர்த்தும்
ஆட்டமுறும் வேளை தாள்பணியும்

ஆணவமெனும் திரை மறைவில்
அறிவின் வளர்ச்சி குறையேற்கும்
நானெனும் அகந்தை போதையேறும்
நாளாகக் கூனிக் குறுகிநிற்கும்

ஆணவம் வெற்றி பெறுவதெல்லாம்
அடுக்கடுக்காய் தோல்விகளைச் சுமக்க,
அடக்கம் தரும் மெய்நிலை மறந்து
ஆணவத் திரைக்குள் அரங்கேறும்

வேகங் கொண்ட மமதையினால்
வீணாய் மாயவலை வீழ்ந்தே
வாழும் வாழ்க்கை கலக்கமுறும்.
பாழும் தலைக்கனம் தடுமாறும்

விவேகம் கொண்டு வழிகாண
விழித்திடும் மனதில் ஒளிபிறக்கும்
அகந்தை அழிpந்திட அடக்கம்வரும்
அன்போடு பணிவும் சேர்ந்துவரும்

Leave a Reply

(*) Required, Your email will not be published