Maname Keal

மனமே கேள்…!
தவறு எனக் கண்டு நீயும் தானாக முடிவு கட்டி தாவிக் குதிக்கும் மனமே…!
நீயும் சாந்தமதைக் கொண்டுவிடு.

சரி என்று எண்ணி நீயும்
சஞ்சலத்தைத் துடைத்தெறி
எண்ணமதைப் புனிதமாக்கு
எதிரில் வரும் நல்அமைதி
நடப்பதெல்லாம் நன்மைக்கே
நலிந்திடாது உன்னைத்தேற்று
இடர் களையும் துணிவு கொண்டு
இதயமதில் உறுதியேற்று
இருளில் கூடப் பாதை தெரியும்
இகலகற்றும் ஒளியையேற்று
மனமே நீயோ எந்தன் சொந்தம்
மாற்றியமைத்தல் எனக்கே உரிமை
நினைத்தே நானும் நிலைக்குள் வைத்தே
நிம்மதி பெறுவேன் இறைவனை நம்பி…

Leave a Reply

(*) Required, Your email will not be published