இனிதாய் மலர்ந்தது 2011
ஏணியாய் எண்ணங்களில் ஏற்றமுற
எழுத்தோடு கலந்தே பவனி வர
கேணியிலே தேங்கிடும் நீர் போலன்றி
வானோடு மண்ணளந்தே மணம்பரப்ப
பாணியூறும் மலர்கனிகள் தீஞ்சுவைத் திரட்டி
வண்ணமிகு நவமணிகளாய்க் கோர்த்தெடுத்து
மணிச்சரமாய் வடிவமைத்துப் படைத்தேனிங்கு
அணிந்தழகு பார்ப்பதற்குத் தடைகளில்லை
அதில் குறைநிறைகள் காண்பதற்கும் மறுப்பேதுமில்லை…
