வானமும் வசப்படும்…
நினைப்பதெல்லாம் நடக்காது என்றே எண்ணாமல்,
நடந்தேறும் என்றே திடமாக நம்பிவிட்டால்,
நினைப்பவை நிறைவேறும், நெஞ்சமதில் உரமேறும்.
கடினமும் இலேசாகிக் காரியங்கள் நடந்தேறும்.
நடந்தேறும் என்றே திடமாக நம்பிவிட்டால்,
நினைப்பவை நிறைவேறும், நெஞ்சமதில் உரமேறும்.
கடினமும் இலேசாகிக் காரியங்கள் நடந்தேறும்.
வரிக்குதிரை வனப்பதுவோ மனங்களை மயக்கினாலும்,
பொழுதெல்லாம் வாளாவிருக்கும் புரிவதில்லை ஏதும்அது,
கழுதையது கச்சிதமாய்க் கத்தும்குரல் இல்லையானாலும்,
பழுதின்றிப் பொதிகளைப் பொறுமையுடன் சுமந்துவரும்,
குதிரையதன் வேகம் பலசாதனைகள் படைத்துநிற்கும்,
மனிதமனங்களில் வரிக்குதிரை கழுதை,குதிரையெனப் பலவுண்டு.
பொழுதெல்லாம் வாளாவிருக்கும் புரிவதில்லை ஏதும்அது,
கழுதையது கச்சிதமாய்க் கத்தும்குரல் இல்லையானாலும்,
பழுதின்றிப் பொதிகளைப் பொறுமையுடன் சுமந்துவரும்,
குதிரையதன் வேகம் பலசாதனைகள் படைத்துநிற்கும்,
மனிதமனங்களில் வரிக்குதிரை கழுதை,குதிரையெனப் பலவுண்டு.
தணியாத தாகங்கொண்டால் தரணியில் உயர்வுண்டு:
என்னால் முடியாக் காரியமிது எனக்கணக்கிடாது,
எண்ணித் துணிந்தே காரியமதைக் கையிலெடு.
கானிடை அலைந்து வாழ்ந்தநம் மனிதன்பின்,
கடலையும் வானையும் வசப்படச் செய்தான்.
உன்தோள்களைத் துணிவோடு நம்பிக்கையால் வசப்படுத்து.
அதுதாங்கிடும் பூமியையும் தாளாத முனைப்போடு.
நீங்கிடும் தோல்விகள் நிலைத்திடும் மகிழ்வங்கு.
உன்வல்லமை கண்டு வானமும் வசப்படும்.
வானம் உன் வசப்படும்…
