Ilatchiyam

இலட்சியம்…
உணவை மறந்து உறக்கத்தைத் துறந்து
ஓடியாடி ஓயாது உழைத்து
எண்ணிய எண்ணம் ஈடேறும்வரை
எல்லா இடர்களையும் ஏற்றே பொறுத்து
உடலது தேய உணர்வது நிலைக்க
எதிர்பார்த்த இலட்சியம் இனிதாய்ச் சேர
வருவது மட்டுமா வாழ்வினில் இன்பம்…?
எட்டிய இலட்சியமதை இருந்தே அனுபவித்து
அதன் பயன் உணர்ந்து அருமையைப் பகிர்ந்து
வாழ்வினில் காண்பதே வளமான இன்பம்
இலட்சியம் என்பது எட்டும் வரையல்ல
எட்டிப்பிடித்த பின்பும் இருந்தே வரையறை காண்பது
அதுவே மகிமை அளவில்லாப் பெருமை
அயரா முயற்சியால் அடைந்திடும் திறமை…

Leave a Reply

(*) Required, Your email will not be published